தமிழியல் வினா விடைகள்

1) படம் வரவில்லை!இப்படத்திலுள்ளவற்றுள் பொருட்கள் என்ன திணையினுள் அடங்கும் ?
1) பன்மை
2) ஒருமை
3) உயர் திணை
4) அஃறிணை
2) இருகுரவர் யார்?
1) தாய், தந்தை
2) தெய்வம், குரு
3) தந்தை, தெய்வம்
4) தாய் , குரு
3) கொண்டல், கார், முகில் எனப் பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்?
1) மேகம்
2) வானம்
3) கண்டம்
4) மழை
4) கண்ணிலான் கண் பெற்றிழந்தாற் போல எனும் உவமைத் தொடரின் பொருள்?
1) பறிக்கப்பட்ட இன்பம்
2) தருணத்தில் உதவி
3) பயனின் அழிவு
4) சேர்ந்துஞ் சேராமை
5) ஆசையும் அழிவும் எனும் பொருள் தரும் உவமைத் தொடர்?
1) குன்று முட்டிய குருவி போல
2) நாய்க்குத் தவிசு இட்டது போல
3) குறிச்சி புக்க மான் போல
4) விளக்கில் விழுந்த விட்டில் போல
6) பழக்கத்தின் புளிப்பை விளக்கும் பழமொழி?
1) நிலவுக்கஞ்சிப் பரதேசம் போவதா
2) வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச்சாட்டு
3) நித்தம் போனால் முற்றஞ் சலிக்கும்
4) மதியாதார் வாசல் மிதியாதே
7) தன்மான உணர்ச்சியை புலப்படுத்தும் பழமொழி?
1) தீராக்கோபம் போராய் முடியும்
2) புலி பசித்தாலும் புல் தின்னாது
3) மெளனங் கலக நாசம்
4) தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு
8) முன்னிலையில் மட்டும் வரக்கூடிய வினை?
1) தெரிநிலை வினை
2) தன் வினை
3) வியங்கோள் வினை
4) ஏவல் வினை
9) மறை, சுருதி, ஆரணம் எனப் பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்?
1) வில்
2) வேதம்
3) மேகம்
4) அரி
10) தேர், குதிரை, யானை, காலாள் என்பன?
1) நால்வகை மிருகங்கள்
2) நால் வருணத்தவர்
3) நாற்படைகள்
4) நாள்வகைப்பா
தேர்வு